அரங்கேற்றம்.
சலசலக்கும் அருவியின்
சங்கீத ஓசை,
சதிராடும் நீரின்
சாரல்கள்,
கதிரவனின் கரம்பட்டு
வண்ண ஒளி கூட்டும்
நாட்டிய மேடை,
தென்றலின் துணையோடு
ஆடும் செடி கொடிகள்,
கை தட்டி ரசிக்கும்
பட்டாம் பூச்சிகள்,
காட்டில் ஒரு
நாட்டியம்
அரஙேற்றம்.
வியாழன், 30 டிசம்பர், 2010
செவ்வாய், 21 டிசம்பர், 2010
kavithai 19
உறைந்து போகும் மனம்.
தலை நரைத்த மலையின் உச்சியில்
நடுங்கி வாழ்ந்த போதும்,
அடர்ந்த காடுகளின் இருளில்
வாழும் விலங்குகளுக்கிடையில்
வசிக்க நேர்ந்தபோதும்,
பனி உருகி ஓடும் ஆற்றின்
கரையில் கூழாங்கற்களின் மேல்
அமர்ந்து குளித்த போதும்,
நில நடுக்கத்தில் உருண்டு வந்த
மலைப் பாறைகளை ஓடிக் கடந்ததும்,
ஆற்றின் மேல் தொங்கும்
பிரம்புப் பாலத்தைக் கடந்து
கரை சேர்ந்ததும்,
பெரிதாக எனக்குத் தோன்றவில்லை,
ஆனாலும் மனம்
உறைந்து தான் போகிறது
மனிதன் மறைத்து வைத்து
எடுக்கும் வீச்சரிவாளால்.
தலை நரைத்த மலையின் உச்சியில்
நடுங்கி வாழ்ந்த போதும்,
அடர்ந்த காடுகளின் இருளில்
வாழும் விலங்குகளுக்கிடையில்
வசிக்க நேர்ந்தபோதும்,
பனி உருகி ஓடும் ஆற்றின்
கரையில் கூழாங்கற்களின் மேல்
அமர்ந்து குளித்த போதும்,
நில நடுக்கத்தில் உருண்டு வந்த
மலைப் பாறைகளை ஓடிக் கடந்ததும்,
ஆற்றின் மேல் தொங்கும்
பிரம்புப் பாலத்தைக் கடந்து
கரை சேர்ந்ததும்,
பெரிதாக எனக்குத் தோன்றவில்லை,
ஆனாலும் மனம்
உறைந்து தான் போகிறது
மனிதன் மறைத்து வைத்து
எடுக்கும் வீச்சரிவாளால்.
திங்கள், 20 டிசம்பர், 2010
kavithai 18
பக்குவமில்லா மனம்.
குலவைப் போட்டு வந்த
கருத்த மேகக் கூட்டம்
கும்மியடித்துக் கொட்டித்
தீர்த்ததும்,
காய்ந்து கிடந்த காட்டாற்றில்
பாய்ந்து வந்த மழைநீர்
கரை தாண்டிக் குதித்து
ஓடியதும்,
சந்தைக்கு போன பொண்ணு
ஒத்தையாய் வந்து நின்னு
அக்கரை போகவேண்டி,அழுது
உதவிகேட்டதும்,
நெறி தவறா குருவும்
அவளை தோளில் சுமந்து
அக்கரை சேர்த்து உயிர்
காத்ததும்,
நினைவுக்கு வந்தன அத்தனையும்
ஆசிரமம் சென்றடைந்த சிஷ்யனுக்கு.
சிஷ்யன் கேட்டான்:
"இளம்பெண்ணைத் தொட்டு
தோளில் சுமந்தது
நமக்கு இழுக்கல்லவா!"
குரு சொன்னார்:
"நான் அந்த பெண்ணை
ஆற்றின் கரையிலேயே விட்டு விட்டேன்
நீ தான் இன்னும் அவளை
நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறாய்."
குலவைப் போட்டு வந்த
கருத்த மேகக் கூட்டம்
கும்மியடித்துக் கொட்டித்
தீர்த்ததும்,
காய்ந்து கிடந்த காட்டாற்றில்
பாய்ந்து வந்த மழைநீர்
கரை தாண்டிக் குதித்து
ஓடியதும்,
சந்தைக்கு போன பொண்ணு
ஒத்தையாய் வந்து நின்னு
அக்கரை போகவேண்டி,அழுது
உதவிகேட்டதும்,
நெறி தவறா குருவும்
அவளை தோளில் சுமந்து
அக்கரை சேர்த்து உயிர்
காத்ததும்,
நினைவுக்கு வந்தன அத்தனையும்
ஆசிரமம் சென்றடைந்த சிஷ்யனுக்கு.
சிஷ்யன் கேட்டான்:
"இளம்பெண்ணைத் தொட்டு
தோளில் சுமந்தது
நமக்கு இழுக்கல்லவா!"
குரு சொன்னார்:
"நான் அந்த பெண்ணை
ஆற்றின் கரையிலேயே விட்டு விட்டேன்
நீ தான் இன்னும் அவளை
நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறாய்."
திங்கள், 6 டிசம்பர், 2010
kavithai 17
மழை வெள்ளம்.
வற்றாத கடல் சிற்றாறாய்
ஆனதொரு காட்சி உண்டா?
மூன்றில் இரண்டு நீருக்கென
தாரை வார்த்த பின்னும்
தரையை கையகப் படுத்தலாமோ!
கண் பட்ட இடமெல்லாம்
வெள்ளம் தொட்ட நீர் நிலை,
ஊரும் பயிரும் நீருக்குள்.
நட்ட பயிரும் மனித உயிரும்
நட்டப்பட்டது.
விளை நிலமெல்லம் வீடானதால்
எழுந்து வந்த வெள்ளம்
ஊருக்குள் ஒண்டிக்கொண்டது.
விரட்டப்பட்ட மக்களோ
கண்ணீருடன் தண்ணீரில்.
குடித்துவிட்டு தெருவில் கிடக்கும்
மனிதர்களைப்போல்
நீயும் குடித்து கிடப்பது முறையோ!
இந்திய நாடாளுமன்றம்
முடக்கப் படுவதுபோல்
கல்விக்கூடங்களை முடக்குகிறாயே
நீ எதிரணியா? இல்லை நீதித் தவறியதா?
இருக்கும் குடிசையை இடித்துவிட்டு
கான்கிரீட் வீடு கட்டித்தருவதாய்
தமிழக அரசு சொன்னதினால்
நீ இருந்த குடிசைகளை இடித்தழித்தாயோ!
இருண்ட மேகங்கள்
பாரி வள்ளலாய் வாரிக்கொடுத்தாலும்
துயரங்கள் தொடர்வதால்
அன்றாடங்காய்ச்சிகளின் பட்டினியால் thooral thaan kaanum
வற்றாத கடல் சிற்றாறாய்
ஆனதொரு காட்சி உண்டா?
மூன்றில் இரண்டு நீருக்கென
தாரை வார்த்த பின்னும்
தரையை கையகப் படுத்தலாமோ!
கண் பட்ட இடமெல்லாம்
வெள்ளம் தொட்ட நீர் நிலை,
ஊரும் பயிரும் நீருக்குள்.
நட்ட பயிரும் மனித உயிரும்
நட்டப்பட்டது.
விளை நிலமெல்லம் வீடானதால்
எழுந்து வந்த வெள்ளம்
ஊருக்குள் ஒண்டிக்கொண்டது.
விரட்டப்பட்ட மக்களோ
கண்ணீருடன் தண்ணீரில்.
குடித்துவிட்டு தெருவில் கிடக்கும்
மனிதர்களைப்போல்
நீயும் குடித்து கிடப்பது முறையோ!
இந்திய நாடாளுமன்றம்
முடக்கப் படுவதுபோல்
கல்விக்கூடங்களை முடக்குகிறாயே
நீ எதிரணியா? இல்லை நீதித் தவறியதா?
இருக்கும் குடிசையை இடித்துவிட்டு
கான்கிரீட் வீடு கட்டித்தருவதாய்
தமிழக அரசு சொன்னதினால்
நீ இருந்த குடிசைகளை இடித்தழித்தாயோ!
இருண்ட மேகங்கள்
பாரி வள்ளலாய் வாரிக்கொடுத்தாலும்
துயரங்கள் தொடர்வதால்
அன்றாடங்காய்ச்சிகளின் பட்டினியால் thooral thaan kaanum
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)