செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

kavithai 23

மரணம்.

கைபிடித்த மனைவி போல்
கூடவே வந்த‌ பதவி
அறுப‌தில் பிரிந்த‌போது
க‌டைசி வரை கூடவர‌
முதுமை துணை நின்றதை
மறப்பேனோ!

மண்ணின் காட்சிகள்
விழித்திரையில்
மறையத் தொடங்கியதும்
ம‌ன‌சின் பார்வை
மாய‌வ‌னை நாடிய‌தை
ம‌ற‌ப்பேனோ!

முதுகு வ‌லியென‌
முத‌ல்வ‌லி கொடுத்து
அடுத்த‌டுத்து
நெஞ்சுவ‌லி,வ‌யிற்றுவ‌லி
எனும் தொட‌ர்வ‌லியில்
என்னைத் துவைத் தெடுத்த‌தை
ம‌ற‌ப்பேனோ!

பேத‌ங்க‌ள் இல்லாம‌ல்
பொதுவாய் நீ இருந்தும்
வ‌தைப‌ட்ட‌ நிலையில் நானிருந்தும்
த‌னி ம‌ர‌மான‌ என்னை
உற‌வாட‌ வ‌ந்த‌ உன்னை
ம‌ற‌ப்பேனோ!

பக்குவமானது மனம்
ம‌னித‌னை ம‌ர‌ண‌ம் வெல்லும்
வாழ்க்கையை நேசிக்க‌
வ‌ழியில்லாத‌ போது
ம‌ர‌ண‌ நேசிப்பும் ம‌ரியாதை பெறும்
சிவ‌லோக‌ப் ப‌த‌விக்காக‌.