ஆண்டவன் படைத்த
மனித உயிரைக்
கொன்று குவித்து
நரபலி கொடுக்க
தீவிரவாதம் என்ன
ஒரு வேண்டுதலா?
மானுடம் சிறக்க
மதங்கள் போதித்தும்
நீயோ
மனிதனை அழித்து
மதத்தினை புதைப்பது
நேர்த்திக் கடனோ!
உன் மூளை
சலவையில்
உன்னை பாவியாக்கியவனின்
அழுக்கு மனதை
அறியாததேனோ!
சிதறிய உடலின்
சிந்திய இரத்தம்
மண்ணுக்கு
செந்நீர் பாய்ச்சி
எதனை பயிராக்க?
பணத்தையா இல்லை
பதவியையா?
கொடிய மிருகங்கள் கூட
பாவப்பட்ட இளங்கன்றுகளை
கருணைக்காட்டி
கொல்லாதபோது
மனிதனுக்கு அறிவில்லையே!