வாழும் உலகை
இறைவன் படைத்தான்..அதில்
ஆண் பெண்ணென
இரு இனத்தை வைத்தான்
அன்பு என்ற வார்த்தைக்கு
பெண் என்று சொல்லி
வைத்தான்
கண் இமை போல்
காக்கும் அன்னையை
பெண்ணினத்தில் வைத்து
பெருமை சேர்த்தான்.
உருவாகும் கருவில்
ஆண்கருவை அதிகம் வைத்து
அதில் கொஞ்சம்
அழித்து வைத்தான்.
பெண்கருவை குறைத்து வைத்து
அனைத்தையும் அழியாமல்
பிறக்க விட்டான்.
பச்சிளம் பருவத்தில்
பிறவி ஊனத்தையும்
தொற்று நோயையும்
ஆணுக்குத் தந்த இறைவன்
பெண்ணைக் காத்து நின்றான்.
ஆணைவிட ஆண்டு எட்டு
அதிகம் வாழ பெண்ணுக்கு தான்
இறைவன் வரம் தந்தான்.
குழந்தை குட்டியென்று
நாளும் போராடும் பெண்களுக்கு
மாரடைப்பு என்னும் பேரிழப்பும்
ஆணைவிடக் குறைவுதான்.
ஆயிரம் காரணம்
அடுக்கிக்கொண்டே போனாலும்
ஆனணைவிட அனைத்திலுமே
அதிக வலிமை பெற்றது
என்றும் பெண்ணினம் தான்.
மாறி வரும் காலத்தால்
கண்டி கதிர்காம முருகப்பெருமானே
காசோலையை ஏற்கும்போது
மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு
இடம் தராததற்கு
இறைவனின் பாராமுகமா?..இல்லை
வலிமை குன்றிய ஆணினமா?
சனி, 24 செப்டம்பர், 2011
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
இலவசங்கள்.
அடைகாக்கும் தாய்மைக்காக
குயிலின் முட்டைக்குக்
கையேந்துவதில்லை காகம்
பிறந்த குஞ்சுகளிடம்
பேதம் காட்டாத காக்கை
கூவத்தொடங்கியதும்
கொத்தி விரட்டுதல்போல்
இலவசம் ஒருநாள்
இன்னலைத் தரும்.
உண்ணாவிரதம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்
சுதந்திரம் பெற்றும்
இன்றும் உண்ணாவிரதம் தான்.
எறும்பைப் போல்
வரிசை பிடித்து
எறும்போடு மனிதனும்
இலவச அரிசியுடன்
வெளி வரும் காட்சி.
நூறு நாட்கள் வேலை
நோகாமல் நித்தம் வரும் பணம்
கள்ளுக்கடை வாசலில்
அடிக்கும் சரக்கால்
கரையும் காசு
மண்ணில் விழுந்துகிடக்கும்
மனிதனுக்கு தெரியுமோ?
அறிய உழைப்பு
அறியாமலே புதைந்து போவதை.
இலவசங்கள்
உழைப்புடன் உறவாடியிருந்தால்
வீடும் நலம் பெறும்
நாடும் மேன்மையுறும்.
இல்லையேல்
உணவுப் பஞ்சம் இலவசம்
விளை நிலங்கள் வீடாவதால்.
பசி பட்டினி இலவசம்
வேலை செய்யமறப்பதால்.
குயிலின் முட்டைக்குக்
கையேந்துவதில்லை காகம்
பிறந்த குஞ்சுகளிடம்
பேதம் காட்டாத காக்கை
கூவத்தொடங்கியதும்
கொத்தி விரட்டுதல்போல்
இலவசம் ஒருநாள்
இன்னலைத் தரும்.
உண்ணாவிரதம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்
சுதந்திரம் பெற்றும்
இன்றும் உண்ணாவிரதம் தான்.
எறும்பைப் போல்
வரிசை பிடித்து
எறும்போடு மனிதனும்
இலவச அரிசியுடன்
வெளி வரும் காட்சி.
நூறு நாட்கள் வேலை
நோகாமல் நித்தம் வரும் பணம்
கள்ளுக்கடை வாசலில்
அடிக்கும் சரக்கால்
கரையும் காசு
மண்ணில் விழுந்துகிடக்கும்
மனிதனுக்கு தெரியுமோ?
அறிய உழைப்பு
அறியாமலே புதைந்து போவதை.
இலவசங்கள்
உழைப்புடன் உறவாடியிருந்தால்
வீடும் நலம் பெறும்
நாடும் மேன்மையுறும்.
இல்லையேல்
உணவுப் பஞ்சம் இலவசம்
விளை நிலங்கள் வீடாவதால்.
பசி பட்டினி இலவசம்
வேலை செய்யமறப்பதால்.
மதங்கள் எதற்கு?
பந்தங்களைத் துறந்த
முனிவன் போல்
மானுடத்தை மறந்து
மௌனித்து நிற்கின்றன
மதங்கள்.
மானுடம் நெறிபட
மதங்கள் தோன்றி
ஆண்டுகள் நாலாயிரம்
கடந்து முடிந்த பின்னும்
பசி பட்டினி
சண்டை சச்சரவென
மலிந்தபூமியாய்
மாறிப் போனதேன்?
சபிக்கப்பட்ட மக்கள்
சாவைத் தள்ளிபோட
கையேந்தும் போதும்
உன்னை மறப்பதில்லை.
இருந்தும் ம்ண்ணில்
இரக்கம்,கனிவு
மனிதநேயம்
காணாமல் போனதேன்?
தண்டல் எடுத்தவனெல்லாம்
சுரண்டி பதுக்குகிறான்
ஊழலைக் கையிலெடுத்து
பிறர் உழைப்பில்
உயிர் வாழும் மனிதர்களின்
நேர்மையும்
கண்ணியமும்
தொலையவிட்டதேன்?
சொந்தமதமென்றாலும்
எந்தமதம் உயர்ந்தமதம்
சொல்லுமா தெய்வங்கள்?
ஏனிந்தமுரண்பாடு
இந்தமண்ணில்.
மதங்கள் வழிகாட்டவில்லையா?..இல்லை
மானுடம் கற்றுக்கொள்ளவில்லையா?
பின் மதங்கள் எதற்கு?
மானுடம் திருந்தாதபோது.
முனிவன் போல்
மானுடத்தை மறந்து
மௌனித்து நிற்கின்றன
மதங்கள்.
மானுடம் நெறிபட
மதங்கள் தோன்றி
ஆண்டுகள் நாலாயிரம்
கடந்து முடிந்த பின்னும்
பசி பட்டினி
சண்டை சச்சரவென
மலிந்தபூமியாய்
மாறிப் போனதேன்?
சபிக்கப்பட்ட மக்கள்
சாவைத் தள்ளிபோட
கையேந்தும் போதும்
உன்னை மறப்பதில்லை.
இருந்தும் ம்ண்ணில்
இரக்கம்,கனிவு
மனிதநேயம்
காணாமல் போனதேன்?
தண்டல் எடுத்தவனெல்லாம்
சுரண்டி பதுக்குகிறான்
ஊழலைக் கையிலெடுத்து
பிறர் உழைப்பில்
உயிர் வாழும் மனிதர்களின்
நேர்மையும்
கண்ணியமும்
தொலையவிட்டதேன்?
சொந்தமதமென்றாலும்
எந்தமதம் உயர்ந்தமதம்
சொல்லுமா தெய்வங்கள்?
ஏனிந்தமுரண்பாடு
இந்தமண்ணில்.
மதங்கள் வழிகாட்டவில்லையா?..இல்லை
மானுடம் கற்றுக்கொள்ளவில்லையா?
பின் மதங்கள் எதற்கு?
மானுடம் திருந்தாதபோது.
தெய்வம் நின்று கொல்லும்
ஊர் எல்லையில்
நின்று
காவல் காக்கும்
சாமிக்கு
படையிலிட்டு
வீட்டு விலங்குகளை
வெட்டிக்
காவு கொடுத்து
வழிபடும்
மனிதனைக்
கரையேறி
எழுந்து வந்து
கடலலைகள்
காணிக்கையாய்
அள்ளி எடுத்து
பலி கொடுக்கும்
தன் ஆதி பகவனுக்கு.
உறவுகளை
தாரை வார்த்து
கண்ணீர் மல்க
புலம்பி அழும்போதும்
நினைவுக்கு
வருவதில்லை
தெய்வம் நின்று
கொல்லுமென்று
நின்று
காவல் காக்கும்
சாமிக்கு
படையிலிட்டு
வீட்டு விலங்குகளை
வெட்டிக்
காவு கொடுத்து
வழிபடும்
மனிதனைக்
கரையேறி
எழுந்து வந்து
கடலலைகள்
காணிக்கையாய்
அள்ளி எடுத்து
பலி கொடுக்கும்
தன் ஆதி பகவனுக்கு.
உறவுகளை
தாரை வார்த்து
கண்ணீர் மல்க
புலம்பி அழும்போதும்
நினைவுக்கு
வருவதில்லை
தெய்வம் நின்று
கொல்லுமென்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)