ஒரு கண்ணை இழந்தவன்
கடவுளுக்கு நன்றி கூற
மறப்பதில்லை
குருடனைக் காணும்போது
கால்வயிறு நிறைந்தவன்
கடவுளை வணங்காமல்
இருந்ததில்லை
பசியில் துடிப்பவனைக் காணும்போது
நெற்றி வேர்வை சிந்தியும்
வயிற்றுபசி தீராத
பாமரனும் பிறப்பால்
ஊனம் தானே!
ஊராரை ஏமாற்றி
ஊர்பணத்தில் திளைத்திடும்
எத்தர்களும் இழிசெயலால்
ஊனம் தானே!
இலஞ்சத்தில் உயிர்வாழும்
வஞ்சகக் கள்வர்களும்
நஞ்சானவர்கள்-அவர்களும்
மனதளவில் ஊனம் தானே!
ஊனத்தைக் கொடுத்து
உயிர்வாழ வழியில்லாதபோது
படைத்த இறைவனும்
படைத்தலில் ஊனம் தானே!
ஊனக் குறையுள்ளோரை
மாற்றுத்திறனாளிகளென
மாற்றியமைத்த
பாரதத் தேசத்தில்
வாழ்க்கை நம்பிக்கை
இரண்டையும் இழந்து நிற்கும்
அனைவரும் ஊனம் தான்
இறைவனையும் சேர்த்து.