வயலு, தோப்புன்னு
வசதிக்குக் குறைவில்லை
ஊரு பழைய நாட்டாமேன்னு
பேருமுண்டு பெரியவருக்கு,
பேர கெடுப்பதுக்கின்னே
பிறந்தது போல
பிள்ளைகள் இரண்டுபேரு
பருவத்தில் படித்து
பட்டம் பெறாம—பிள்ளைகள்
வட்டம் அமைத்து
வெட்டியாய் ஊர் சுற்ற,
வெகுட்சியுற்ற பெரியவர்
விவசாயம் பார்க்க சொன்னார்,
பிள்ளைகளோ வெளிநாடு
போய் வேலையில் அமர்ந்தனர்
நட்ட பயிரெல்லாம்
நீர் வரத்து இல்லாம—பூமி
பாளம், பாளமாய் பிளந்து
பயிரெல்லாம் கருகி சாய,
பொறுப்பா விவசாயத்தை
பார்த்துக்க ஆளில்லாம—விரக்தியுற்ற
பெரியவர் மனமொடிந்து
வரப்போரமா இருக்கும்
மரத்தில் தூக்கிட்டு
மரணத்தைத் தழுவினார்,
சாவுக்குக் காரணம்
கேட்காத பிள்ளைகளா? இல்லை
கேட்டும் வராத காவிரியா?
காவிரிக்கு தெரியாதா என்ன?