ஏமாற்றமே வாழ்க்கையென்றால்
எதிர்பார்க்க என்ன உண்டு?
ஏத்தனை முறை பிறப்பு
எடுத்தாலும்
என்னத்த பார்க்க போறா?—இந்த
ஏழைத்தாய்
புருஷனை பறிகொடுத்தாள்
ஒரு கண்ணையும் இழந்தாள்
ஒற்றைக் கண்ணியென
ஊரில் பேரெடுத்தாள்—தன்
ஒரே பிள்ளையை படிக்க வைத்து
வயித்துக்கு வழி வகுத்தாள்
ஒற்றைக் கண்ணியின் மகனென
உற்ற நண்பர்கள் கேலி செய்ய
தாயை மகன் வெறுத்து
தனி வீட்டில் குடி வைத்தான்
தாயை அழைக்காமல்—தன்
திருமணமும் செய்து கொண்டான்
உணர்வுகளை உள்ளடக்கி
வயிறு பத்தி எரிகையிலே
நிலைகுலைந்து போன தாய்
நித்தம் கண்ணீர் வடித்தாள்
கடவுளை வேண்டினாள்
காலன் உதவி செய்தான்
பள்ளி விழாவுக்கு வந்த
பழைய மாணவர்களில்
பையனும் வந்திருந்தான்,
பெற்ற தாய் இறந்ததை
பள்ளி நிர்வாகம் சொன்னதோடு
அன்னை எழுதிய கடிதத்தையும்
அவனிடம் சேர்த்தனர்
அதில் “ அன்பு
மகனே உனக்கு நான்
அவமானமானதை எண்ணி
நெஞ்சம் உடைந்து போனேன்,
நீ சிறுவனாக இருந்தபோது
சிக்கிய விபத்தில் விழியொன்றை
இழந்த உன்னை
ஒற்றைக் கண்ணனெ
ஒருவரும் கிண்டல் செய்யாதிருக்க
எனது கண்ணில் ஒன்றை
எடுத்து பொருத்த சொன்னேன்
என்னை மன்னித்து விடு மகனே “
என்று எழுதப்பட்டிருந்தது.
யார், யாரை மன்னிப்பது?