கோவலனைப் பிரிந்து
கண்ணகி வாழ்ந்திருந்த சமயம்
கணவனோடு மீண்டும்
கைகோர்த்து வாழ்வோமென
நம்பியிருந்தபோது
நாயகன் இறந்து போனான்
நொறுங்கிப் போனாள் கண்ணகி
அயோத்தி இராமன்
அறவழியில் பொருதாமல்
மறைந்து நின்று வாலியை
மண்ணில் சாய்த்தான்,
வாலியை இழந்தத் தாரையோ
கடைசி வரை அழுது புலம்பினாள்
கணவனைப் பிரிய மனமில்லாமல்
புரிந்து வாழ்ந்த தம்பதியர்
பிரிந்துபோக நேரும்போது,
மன ஒற்றுமை வெளியேறும்
மாற்றங்கள் அரங்கேறும்,
உள்ளங்கள் தவிக்கும்
உடல் நலம் பாதிக்கும்
உயிரும் பறிபோகும்
கூடி வாழ்ந்தபோது
பதியின் அருமை பாரிக்கும்
பாரியின் அருமை பதிக்கும்
புரிவதில்லை
பிரியும்போது வேதனையுறும்
இருவரில் ஒருவர் இறக்கும்போது
அது விசுவரூபமெடுக்கும்.