திங்கள், 19 ஜூன், 2017

காட்டிக் கொடுப்பாரா என்ன!



காலில் கல்லைக் கட்டி
கடலில் குதிப்பதுபோல்
கேட்கும் இலட்சங்களை
கொட்டி தாரை வார்த்து
கற்பிக்கும் கல்வியால்
உயரம் தொட்டவன்
வசதியுள்ளவனின் வாரிசு

அதிக மதிப்பெண்கள்
ஆசையை உசுப்பிவிட்டு
மனதை கிறங்கவைப்பதால்,
மகுடத்தை அடகுவைத்து
பிள்ளையை படிக்க வைப்பான்
ஏற்றம் காண விழையும்
இல்லாத ஏழை

வாழவழிக் காட்டினாலும்
வேலை கிடைப்பதோ
மறுபிறவி எடுப்பதுபோல்,
மீண்டு எழும் ஏழைக்குக்
கூட்டுக்குடும்ப வாழ்க்கை
கண்களைக் கட்டும்
கைகொட்டி சிரிக்கும்

வரதட்சணையின்றி
வரண் தேடும் மங்கையர்க்கு
படிப்பும், பண்புமுள்ள நல்லவன்
ஒருவனைக் காட்ட
இறைவனால் முடியுமா?
கடவுள் படைத்த நம்மை

காட்டிக்கொடுப்பாரா என்ன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக