வியாழன், 28 செப்டம்பர், 2017

பண உதவியும் நல்கினார்



பேரறிவு இருப்பதை
பறைசாற்றும்
அடையாளங்களில் ஒன்று
அடக்கம்,
அது இருக்கும் இடத்தில்
பேரறிவு மறைந்து
ஒளிந்திருக்கும்

ஆழ்கடல் நீரின்
அளவு தெரிவதில்லை
ஆர்ப்பரித்தும் சொல்லாமல்
அமைதியாய் இருப்பதுபோல்
பேரறிவு என்றும்
நிறை குடம்போல
தழும்பாது

அடக்கமே உருவான
அன்னை தெரசா ஒருநாள்
செல்வந்தர் ஒருவரிடம்
ஏழை சிறார்களுக்கு
நிதியுதவி வேண்டி
நின்றிருந்தபோது—அவர்
அன்னைமேல் காரி உமிழ்ந்தார்

பதறாத அன்னை
புன்முறுவலோடு சொன்னார்
எனக்கு வேண்டியதைக்
கொடுத்துவிட்டீர்கள்,
குழந்தைகளுக்குக்
கேட்டதை தாங்கள்
தரவில்லையே என்றார்

செல்வந்தர் வெட்கப்பட்டார்—தன்
செயலுக்கு வருந்தினார்
அன்னையிடம்
மன்னிக்க வேண்டினார்,
மனம் திருந்தியவர்
பிள்ளைகளின் நலனுக்கும்

பண உதவி நல்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக