ஞாயிறு, 15 அக்டோபர், 2017

வஞ்சிக்கலாமோ!




தீங்கிழைத்தவரை
தீர்த்துக்கட்ட எண்ணும்
மனித சாதியை
மதிக்காமல்
கேடு விளைவிக்கும்
கெட்டவனோ நீ,
இருந்தும் உன்னை
இதுவரை வழியின்றி
அழிக்காதிருக்கும்
அவர்களின் துயரை நீ
அறியாயோ!

மழை பெய்தா
மனங்குளிரும்
மகராசன் நீயும்
கூட வந்தா
நெஞ்சு படபடக்கும்,
நினவுக்கு வரும்
குப்பையெல்லாம்
குன்றுபோல
காட்சி தரும்
கையிலே பணமில்ல
கலைவது எக்காலமோ!

தடுமாறும்போது
தத்துவம்
தலை தூக்கும்,
இல்லாதோர்க்கு
இலவசமா சாவைத்தந்து
வாழும் டெங்குவே,
உன்னை அழிக்காமல்
வாழவைத்தவரை
மறக்கலாமோ!
மக்களை நீயும்
வஞ்சிக்கலாமோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக