வெள்ளி, 1 டிசம்பர், 2017

மனித வாழ்க்கை


நேர்மை, நந்நடத்தை
நன்மையும், அமைதியும் தரும்

நேர்வழி வந்த செல்வம்
நெஞ்சுக்கு நிம்மதி தரும்

உதவுவதும், உதவியவற்கு நன்றி
கூறுவதும் மனமகிழ்வு தரும்

அமைதியான அறப்போராட்டம்
ஆக்கம் தரும், பாராட்டு பெறும்

நற்பண்பு நம்மிடமிருந்தால்
நெஞ்சில் நிம்மதி நிலைத்திருக்கும்

மண்ணில் வாழ் மாந்தருக்கு
மன அமைதி மகிழ்வைத்தரும்

மாயவனிடம் அமைதி காணும்—அதனால்
மனித மனம் ஆலயம் நாடும்


ஆசை, பேராசை இரண்டும்
அமைதியைக் குலைத்துவிடும்

அதிக செல்வம், இல்லா ஏழ்மை
அமைதியை அழித்துவிடும்

மரத்தின் அமைதி காற்றால் கெடும்
மனித அமைதி தலைவனால் கெடும்

நீதி பொதுவென்று மதிக்காதவரை

நரகமாகும் மனித வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக