வியாழன், 4 ஜனவரி, 2018

வாய்க்கரிசி போடவா?



பள்ளி போகும் பிள்ளை
பணம் கட்ட கேட்டபோது
படிக்க வைப்பதின் கஷ்டத்தை
புரிந்து கொண்டதுபோல்
கடந்து போனார் தந்தை
காதில் வாங்காமல்

கல்லில் நாரு உரிப்பதுபோல்
கட்டிய மனைவி
கணவனிடம் கைசெலவுக்குக்
காசு கேட்டபோது,
மடியில கனமில்லாம
மருட்சியுற்றது அவன் மனசாட்சி

மளிகைக் கடைகாரன்
மாசம் முடிந்து, பணம் கேட்டு
வாசலில் வந்து நிற்க,
வேறு வழியின்றி
விதியை நம்பி புலம்பியவன்
வாழ்வில் எதை சாதிப்பான்?

வறுமையில் நாளும்
வாடும் நடுத்தர மனிதனுக்கு
வாழும் வாழ்க்கை
கால் சுற்றும் பூனையாய்க்
கடந்து போகாமல்
கசந்து போனாலும்

சம்பளம் வாங்கியதும்
சகலத்தையும் மறந்து
சபலபுத்திக்கு சபிக்கபட்டதுபோல்
சாராயக்கடையை தேடிப்போவது
சாக்கடையில் விழவா?,-- இல்லை
செத்து வாய்க்கரிசி போடவா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக