புதன், 10 ஜனவரி, 2018

இதுதான் வாழ்வு



 உடல் வருத்தி ஒருவன்
உழைத்து சேர்த்த செல்வத்தை
இன்னொருவன் அபகரிப்பது
என்ன நியாயம்?
உயிர் மூச்சு நின்றுபோனால்
உன்னோடு கூட வருமா?

துயர் துடைக்க போதாத
தொழிலாளர் வருமானம்
கற்று தரும் கடன் வாங்க,
கந்துவட்டி கூட்டலில்
கைமாறும் காணி நிலம்
உயிரை எடுக்காமல் போகுமா?

மண்ணை ஆண்டவர்
மண்ணிலும் கோடி
இன்னும் ஆள்பவர்
எத்தனை கோடியோ!
செத்தபின்னே உனக்கு
சொத்து விபரம் தெரியுமா?

சேர்த்த சொத்தையெல்லாம்
பத்திரமா பாதுகாக்க
பிரார்த்தனை பகவானுக்கு,
அசரீரிபோல் பூசாரி சொன்னார்
“இறுதியில் அனைவருக்கும் ஆறடிதான்
அதுவும் நிலையானதல்ல” என்றார்

உலகம் முழுதும் போதாதென்று
உரக்கக் குரல் கொடுத்த
மாமன்னன் அலெக்சாண்டர்
மாண்டபின் “ கல்லறை
போதுமானதாக பொறிக்கப்பட்டுள்ளது “
இதுதான் வாழ்வு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக