செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

மரங்களல்ல, மனிதர்கள் தான்.



நன்றிக்கடன் பட்டதுபோல்
நன்மைகள் பல செய்திடும்,
நீர் விட்டு வளர்த்த
நில மாந்தரை நேசிக்கும்,
தன்னைக் காக்கும் மண்ணை
தன் வேரால் காத்தருளும்

வாழும் உயிர்களுக்கு நிழல் தந்து
வெப்பம் தணிக்கும்,
கனியும், இலையும் கொடுத்து
கனிவோடு பசிபோக்கும்,
உருமாறும் தன் உறுப்புகளால்
உதவிக்கரம் நீட்டும் மாந்தர்க்கு

மண்ணில் வாழ் உயிர்களுக்கு
மழை நீரை பெற்று தரும்,
மூச்சிழுத்து, மூச்சு விடும் மரம்
மனித சுவாசத்தை மேம்படுத்தும்,
மானுட நன்மைக்கு தன்னை
முழுமையாய் அர்ப்பணித்திருந்தும்

மரத்தின் அரிய பண்பு
மனிதனிடம் இல்லையே!,
நன்றி மறந்த மனிதன்
நயவஞ்சகமா மரங்களை
வெட்டி சாய்ப்பதால்
வேதனையில் வாடப்போவது

மரங்களல்ல, மனிதர்கள் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக