மண்ணில் தோன்றிய
மானுடம், உயிர் வாழ
உணவைத் தேடியது
உழைப்பு வழிகாட்டியது
உயிரும், உழைப்பும்
உடன் பிறப்பானது
உழைப்பு உணவு தந்தது
உணவு உயிரைக் காத்தது,
உழைப்பு சிந்திய
வியர்வைத் துளிகள்
தலையெழுத்தை மாற்றி
தரணி போற்ற வைத்தது
சிரத்தையுடன் உழைத்து
சிகரம் தொட்டவர்களின்
சாதனைகளை
சரித்திரம் பறை சாற்றியது
உழைக்கும் கரங்களால் தான்--புவி
புதுப் பொலிவு பெறுகிறது
உழைப்பின் ஆற்றல்
உள்ளத்தை மகிழ்விக்கும்
செல்வத்தை பெருக்கும்
தேகத்தைத் திடமாக்கும்
அறிவுக்கு எட்டாததையும்
அருகில் கொண்டுவரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக