வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

தெய்வத்தின் உயிர்கள்



வேறு வேறு நாட்டில்
தோன்றிய மதங்கள்
வேறுபட்ட வழிபாட்டால்
வெவ்வேறு மதங்களென
இந்து, கிறிஸ்துவம், முஸ்லீம்,
புத்த மதமென உருவானது

ஒன்று படாத மனங்கள்
ஒட்டாமல் போனது,
இறைவன் ஒன்று தான்
அவனிடம் செல்ல
வழிகள் தான் வெவ்வேறென
உணர்ந்தாலும்,
எல்லோரும் ஏற்காதபோது

சாமி இருக்கும் கோவிலையும்,
சர்ச்சையும், மசூதியையும்
ஒன்றுபோல எண்ணி
அடைக்கலம் பெற்று
உயிர் வாழும் அமைதிப் புறாக்கள்
வணங்கித் தொழவேண்டிய
தெய்வத்தின் உயிர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக