திங்கள், 30 ஏப்ரல், 2018

கல்லாதது உலகளவு




கொடுத்தவன்
எடுத்துக்கொள்வது இயல்பு
இறைவனே யானாலும்
அதுதான் நியதி,
எடுத்துக்கொண்டது
இறைவன் என்றால்
பாவ புண்ணியம் பற்றி
பேசுவார்கள் பாமர மக்கள்

தந்ததை தரமறுப்பவனின்
தலையெடுக்க துணியும் மனிதனுக்கு
பகையும், பணமும்
பாவத்தை சுமக்க வைக்கும்,,
உடல் துறந்த உயிர்
உறவுகளை விட்டு போவதெங்கே?
எடுத்து சொல்ல
எவருண்டு பூவுலகில்?

சிறுமியொருத்தித் துறவி ஒருவரிடம்
இதையே தான் கேட்டாள்
அவருக்கு தெரியாதென
அச்சிறுமியை சொல்ல சொன்னார்,
“இடுகாடு செல்லும் பிணத்தோடு
  கூட வரும் கூட்டத்தை வைத்து
  கூறமுடியும் என்றாள்’’
துறவி  அதனை ஏற்றுக் கொண்டார்

அறியாத சிறுமியிடம்
அறிவு பிச்சை  கேட்டு
விடை தந்த சிறுமியிடம்
வெட்கி தலைகுனிந்தார் துறவி,
கதையென்றாலும் கருத்து உண்டு
கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு
அதுதான் அநுபவம் என்பது.

வியாழன், 26 ஏப்ரல், 2018

வெறுதே பறித்ததற்காக




இறைவனின் திருநாமத்தை
இடைவிடாது உச்சரிக்கும்
பெரியவர் சாமினாதன்ஒரு
பெரும் சிவபக்தர்,
விடியலுக்குமுன் தினமும் எழுந்து
விநாயகரை வழிபட்டுத் திரும்பும் வரை
காவி உடையில் காட்சி தரும்
கடவுள் பக்தர்

மளிகை சாமான்கள் விற்கும்
மொத்த வியாபாரம்
பெரியவருடையதுதான்
பெரும் செல்வந்தர்,
வெளியில் இவர் நடந்து சென்றால்
வருவோர், போவோரெல்லாம்
வணக்கம் சொல்லி வணங்குவர்
வணங்கி, வாழ்த்துவார் பதிலுக்கு

தெய்வத்தை நம்பினார்மக்களையும்
தெய்வமாகக் கருதினார்
இறை பணிக்கு அள்ளிக் கொடுத்தார்
இல்லாதவருக்கும் தந்து உதவினார்,
ஆலயம் சென்று விநாயகரை வழிபட
ஆட்டோ ரிக்சாவைத் தேடிஒருநாள்
அருகிலுள்ள பேருந்து நிலையத்தில்
காத்திருந்தார்

அப்போது மரத்தடியில்  உள்ள சாமிக்கு
அர்ச்சனை பொருட்களோடு
காவி உடை தரித்துத் திருநீரு பூசி
கடவுளை வழிபட ரிக்ஷாகார பக்தர்கள்
பீடி குடித்ததையும்
பேசக்கூடாததை பேசியதையும்
கவணித்த பெரியவர், மனம் வருந்தி
கடவுளுக்கு அடுக்குமாஎன்றார்

மறுநாள் வீடுதேடி வந்த பக்தர்கள்
மன்னித்தருள வேண்டினார்கள்,
பெரியவர் வேண்டா வெறுப்போடு
ஏற்றுக்கொண்டு, சொன்னார்
தெய்வ நம்பிக்கையை
தலையில் தூக்கி வச்சுட்டா
அதற்கு ஏற்றாற்போல் தான்
இருக்கனும்என்றார்

பிள்ளையாருக்கு பெருவிழா
பங்குனித் திருவிழா வந்தது
செலவுகள் அனைத்தையும்
பெரியவரே ஏற்று நடத்தினார்,
பூஜையை முடித்து பூசாரி
பக்தகோடிகளுக்கு
அன்னதானம் வழங்கியபோது
அதை ஏற்க மறுத்தனர்

அன்னதான சோற்றில்
அதிகம் கல்லும், மண்ணும்
இருந்தது தான் காரணமென
அறிந்த பெரியவர் நிலைகுலைந்தார்
சரிந்து விழுந்து புலம்பினார்
உடல் நடுங்க, வாய் குழறியது
யாரோ செய்த பாவம்
இவரைக் கவ்வியது

அப்பதான் பெரியவர் உணர்ந்தார்
இறைவனது நம்பிக்கையை
சிரசில் தூக்கி வச்சா
அதற்கு ஏற்ப இருக்கனும் என்பதை,
கண்ணீர் வடித்தது இரு கண்களும்
கடவுளிடம் மன்னிப்பு கேட்க அல்லஒரு
பெரும் சிவபக்தரின் உயிரை
வெறுதே பறித்ததற்காக.





வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அகிலத்தில் யாருண்டு?




புவி வாழ் உயிரினங்களில்
பிறந்ததும் அழுவது
மானுடப் பிறவி மட்டும் தான்,
மனிதம் அழிந்ததற்காக அல்ல
மண்ணில் பிறந்த சிசுவின்
முதல் சுவாசத்திற்காக

சிரிப்பதால் உடலுக்குக்
கிடைக்கும் பலனை விட
அழுவதால் பெறுவது
அதிகமென்று
இறைவன் உயிரின் இயக்கத்தை
அழுகையில் ஆரம்பித்து வைத்தானோ!

பெண்களை படைத்த தெய்வம்—தன்
பணிகளை அவளிடம் தந்து
நித்திரைக் கொண்டதின்
நன்றிக் கடனாக
ஆண்களைவிட பெண்களை
அதிகம் அழவைத்தானோ!

வடிக்கும் கண்ணீர்
வேதனையை போக்கும்,
உடலுக்கு ஒவ்வாதவற்றை
வெளியேற்றும்
உடல் நலம் பெறும்
உள்ளம் அமைதியுறும்

தொடர் சிரிப்பால் உயிரைத்
தொலைத்தவர்கள் உண்டு,
அழாமல் அழுகையை நெஞ்சில்
இருத்தியவர்களும் இறந்ததுண்டு—ஆனால்
அழுததால இறந்தவர்கள்
அகிலத்தில் யாருண்டு?

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தெரியாதா என்ன !




ஊழலில் திளைக்கும்
உத்தமர்களின் செயல்பாடோ!
ஒரு தாய் மக்களின்
உறவறுத்த நிலைபாடோ!
தன் நலம் காத்திட
தடுத்துவிட்ட தந்திரமோ!

கல்வெட்டில் பதித்த பின்னும்
காலம் தாழ்த்தும் மந்திரமோ!
சத்தியங்கள் செத்தபின்னே
சாத்தானின் சாபக்கேடோ!
பட்டுபோன நிலத்தில் விட்ட உயிர்கள்
நட்டு வைத்தால் துளிர்க்குமோ!

காலமெல்லாம் காத்தவளை
கட்டிபோட்டு கொல்லவோ!
கட்டுக்கடங்காம கட்டவிழ்ந்தால்--சவத்தை
தொட்டுவிட்டு போகவோ!
படைத்த பரமனுக்கும்
பாவமின்னு தோனலையோ!

நதிநீரை இணைக்கவும்
நல்ல நேரம் பார்க்கணுமோ!—இல்லை
கடைகோடி பாரதத்தை
கங்கைக் கரையில் அமர்த்தனுமோ!
எது சிறப்பானதென்றுமுடிவு
எடுப்பவர்களுக்கு தெரியாதா என்ன !

புதன், 4 ஏப்ரல், 2018

கவலை நமக்கெதற்கு?




ஆமையைப் போல

அமைதியாய்

நடந்து வரும்

நம் மனித உரிமைகள், எப்போதும்

காலம் கடந்து வரும்இல்லை

காலமடைந்துவிடும்



அடுத்தவருடைய

ஆன்மாவை, உரிமையை

பறிப்பது குற்றமென்று

பதிவாகியுள்ளது சட்டத்தில்,

சட்டமிருந்தும்யாரும்

சஞ்சலப்படுவதில்லை



பல ஆயிரம்

ஆண்டுகளுக்கு முன்பேநம்

முன்னோர்கள்

குரல் கொடுத்தும்

இன்னும் அதே நிலை தான்

பின் கவலை நமக்கெதற்கு?