காலமெல்லாம் மனைவியாய்
கட்டுபட்டு வாழ
தொட்டு கட்டிய தாலி தானே
தொலையாத சாட்சி
பணிவிடை செய்யவும்
புருஷன் இறந்தால்
உடன் கட்டை ஏறவும்
வழி வகுத்தது பழங்கால மனுநீதி
மனித சாதியைத்தவிர
மற்ற எந்த உயிரினமும்
பெண்ணினத்திற்கு இந்தளவு
பாதிப்பு தந்ததில்லை
பெண்கள் உடல் ரீதியா
பலவீனமானவர்கள்—ஆனால்
அறிவில் சிறந்தவர்கள்
ஆண்களைவிட புத்திசாலிகள்
உடல்வலியைத் தாங்கும்
வல்லமை பெற்றவர்கள்,
நினைவாற்றலில்
சிறந்து விளங்குபவர்கள்
ஆயிரம் ஆண்டுகள் போராடி
இருநூறு ஆண்டுகளுக்கு முன்
உடன் கட்டை ஏறும்
வழக்கத்தை ஒழித்தார்கள்
பெண்களுக்கு இதெல்லாம்
எளிதில் கிடைத்ததல்ல
போராடி பெற்றவை
போற்றுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக