ஞாயிறு, 27 மே, 2018

உருவாகுதோ




தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதரநம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்

குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்

ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது

தமிழகத்தில்  தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக