மஹாபாரத மண்ணுக்கு
மரியாதையுண்டு எப்போதும்
மக்கட்தொகை பெருக்கம் அதிகம்,
கானகத்து விலங்குபோல
கல்லாதாரும் இங்கு அதிகம்
மக்களின் வரிப்பணத்தில்
மக்களுக்கு இலவசம் தந்து
மக்களை மாக்களாக்கி
மகோன்னத வாக்கை பெற்று--இங்கு
மக்கள் பிரதிநிதியாவதும் அதிகம்
நீருக்கும், சோறுக்கும்
நாளெல்லாம் போராடும்
நம்மோட மக்கள் அதிகம்,
ஊட்டச்சத்து இல்லாம—இங்கு
உயிரிழக்கும் குழந்தைகளும் அதிகம்
அனைத்தும் அறிந்திருந்தும்
அறியாதவர்போல்
அடுத்தவருக்கு உதவாதவர்கள் அதிகம்,
தான் மட்டும் வாழ எண்ணும்
தான்றோன்றிகளும் இங்கு அதிகம்
அதிகம் ஆகாதவரை
அனைத்தும் அழகு தான்,
உயிரைக் காக்க
உதவும் ஆக்சிஜனேயானாலும்
அளவோடு இருப்பது தான் நலம்
ஒன்று தெரியுமா உனக்கு
அதிகமாகும் ஒன்றால்
இழக்க நேரும் மற்றொன்றை,
இது இயற்கை வகுத்த நீதி--அனைவரும்
இதனை உணரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக