செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தெரியாதா தனது குறை!




குற்றம் புரியாத மனிதன்
புவியில் எங்குமில்லை,
நிறை, குறை தெரியாமல்
குறை கூறலாமோ!
குறை கூறும் நெஞ்சம்
கறை படும்,
குற்றம் பார்க்கில்
சுற்றமில்லை

தன்னோட முதுகு
தனக்கு தெரியாததுபோல்
ஊசியை பார்த்து
சல்லடை சொன்னதாம்
ஊசிக்கு வாயில
ஓட்டையென்று,
ஏதும், அறியாமல்
ஏளனம் செய்யலாமோ!

ஊசிக்கு ஒரு ஓட்டை
உளறிய சல்லடைக்கோ
உடம்பெல்லாம் ஓட்டைகள்,
ஊசியோ இரு துணிகளை
ஒன்றிணைக்கும்,
தேவையற்ற குப்பைகளை
தக்கவைக்கும் சல்லடைக்கு
தெரியாதா தனது குறை?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக