புதன், 22 ஆகஸ்ட், 2018

என்றும் வாழும்




விளைச்சல் தரும் விதைகள்
விவசாயிகளின் வாழ்வாதாரம்
என்றிருக்கையில்
கன்றின் விதைகளை மட்டும்
கிட்டிக் கொண்டு நசுக்கி
சிதைப்பது முறையோ!
கண்டு பிடித்தது யார்?
கல்நெஞ்சக்காரனாஇல்லை
கூலிக்கு மாரடித்தவனா?

காளை கன்றுகளுக்குக்
கசையடித்தபோதும்
கொம்புகளை தீய்த்தபோதும்
காதுகளை அறுத்தபோதும்
உடலில் சூடு வைத்தபோதும்
கன்றுக்குட்டி கடும் வேதனையில்
கதறியிருக்குமே, பாவமில்லையா!
அத்தனையும் சகித்து வளர்ந்தன
அன்றைய காளைக்கன்றுகள்

அனைத்தையும் கன்றுகள் மறந்து
அடிமைகளைப்போல்
உழவர்களின் வயல் வேலைக்கு
உறுதுணையாயிருக்கும்,
உறவான பசுமாடோ
அன்னையைப்போல
அனைவரையும் பாலூட்டி வளர்க்கும்
மனித நேயம் மறைந்தாலும்--நெஞ்சில
மாட்டு நேயம் என்றும் வாழும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக