சனி, 8 செப்டம்பர், 2018

அவமானப்பட்டான்


கேள்வி எதுவானாலும்
கேட்டதும் சட்டென்றுபதில்
கூறும் ஒரு பெரியவர்,
அவரை அவமானப்படுத்த
ஒரு அரைவேக்காடு முயல

ஒரு நாள்
ஒரு சிட்டுக்குருவியைத் தன்
உள்ளங்கைக்குள்
மூடி வைத்துக் கொண்டு
பெரியவரிடம் வந்தான்

இந்தக் குருவி உயிரோடு
இருக்கிறதா?
இல்லை செத்துவிட்டதா?
கூறுங்கள் பெரியவரே எனக்
கேட்டான்

உயிர் இருக்கு என்றால்
உள்ளங்கையில் வைத்தே
கொன்று விடுவான்,
இறந்து விட்டதென்றால்
கையை விரித்து பறக்க விடுவான்

என்பதை உணர்ந்த
பெரியவர் சொன்னார்
அது உன் கையில் தான்
இருக்கிறது என்றார்
அரைவேக்காடு தான்இப்ப
அவமானப்பட்டான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக