ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உன்னோட மனசாட்சி




கதிரவனை படைத்து
காலையில் எழவைத்து
கதிர் வீச்சால் முகம் காட்டி
கடமை தவறாமல்
நேர்மையோடு அவனை
செயல்பட வைத்து
வாழ்கின்ற மக்களுக்கு
வழிகாட்டியது இயற்கை

படிக்காத மாணவனை
பிரம்பால் அடித்து அவன்
குடும்பம் மேன்மையுற
உதவும் ஆசிரியர் போல,
கருத்த மேகத்தை அடித்து
குரலெழுப்பி ஓலமிட்டு
கண்ணீர்விட வைத்துஉயிர்களைக்
காப்பதும் ஆதவன் தானே!

வெள்ளை நிறத்தழகியை
வீதியில் உலாவரச்செய்து
அன்பும், காதலும் தந்து
இதயத்தைக் குளிரச்செய்ததும்,
பச்சிளம் குழந்தையின்
பசிபோக்க துணை நிற்கும்
நிலாப் பெண்ணை படைத்ததும்
இயற்கை தானே!

ஆணும், பெண்ணும் உழைக்க
அன்றே வழிகாட்டியதும்
இயற்கை தானே,
பகலில் உழைத்த ஆதவன்
படுத்துறங்கும் இரவில்
நிலாப்பெண்  பொறுப்பேற்க
நிம்மதி கொள்வாள்
இயற்கை அன்னை

இயற்கை அன்னை
இத்தனையும் கற்று தந்தும்
மக்களின் துயர் போக்க
மனமில்லையே சிலருக்கு,
தான் வாழ்ந்தால் போதுமென்று
தரம் தாழ்ந்தால்
உன்னை அழிக்காதா
உன்னோட மனசாட்சி?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக