சனி, 20 அக்டோபர், 2018

கூடவே இருக்கலாம்




அகத்தில் உள்ளதை

அம்பலப்படுத்தி

கெட்டவனென்று என்னைக்

காட்டிக் கொடுக்காமல்,

முகத்தில் பூசிய

பூச்சுகளால்

என்னை அழகாகக் காட்டி

என் அகம் தொட்ட உன்னை

இதயத்தில் சுமப்பேன்

உயிர் உள்ளவரை,

பாடி பரிசு பெறும்

புலவர் போலநீயும்

அரண்மனை வாசத்துக்கு

அடிபோடுகிறாயோ!

கவலை வேண்டாம்

கைவிட மாட்டேன்

கண்ணாடியே

கூடவே இருக்கலாம்                                                    


இறந்தவரை மீட்குமா?



வாழ்விழந்த விவசாயம்
வாழவைக்குமா உயிர்களை?,
நாளும் ஒரு மரணம்
நாளைய நிலையை கூறும்,
வறுமையில் வாடும் ஊரு
வயிற்றுக்கு நாளும் வழி தேடி
வேதனையுறும் மக்கள்

அங்கு வாழ்ந்தவர்களில்
ஆண்டியப்பனும் ஒருவர்,
இனிமையாகப் பழகுவார்மனைவி
இறந்துவிட்டார்
அம்மாவும், ஒரே மகளும்
அவரோடு வாழ்ந்தார்கள்,
அவரையும் வறுமை விடவில்லை

பெண்ணோ பூனை ஒன்றை
செல்லமாக வளர்த்தாள்,
பெண்ணுக்கு துணையானது
எல்லோரிடமும் பூனையும்
அன்பு காட்டியது,
காலம் கணிய பூனை
குட்டிகள் ஈன்றது

வளரும் குட்டிகள்
வீட்டில் அங்குமிங்கும் ஓடி
அக்கம்பக்க வீடுகளிலும்
அடியெடுத்துவைத்தன,
குட்டிகளின் சேட்டைகளும்
கும்மாளங்களும்பாட்டிக்குக்
கோபத்தைத் தந்தன

பேத்தி வருத்தமுற்றாலும்
வேறு வழியின்றி
ஊருக்குவெளியிலுள்ள
புதர்களில் விட்டுவிட எண்ணி,
பூனை வீட்டில் இல்லாதபோது
பூனைக்குட்டிகள்
புதர்களில் விடப்பட்டன

வீட்டுக்கு வந்ததும் பூனை
குட்டிகளைக் காணாது
வேதனையில் துடித்தது,
அங்குமிங்கும் அலைந்து
வருந்திக் கத்தியது,
தாய்மையின் வேதனை
தாய்க்குத்தான்  புரியும்

யாரைப் பார்த்தாலும் பூனை
சீறத் தொடங்கியது
பாட்டியின் சேலையை கால்களால்
பதம் பார்த்தது,
பாட்டி சீற்றம் கொண்டாள்
பூனையை துடைப்பத்தால்
முகத்தில் அடித்தாள்

அவமானமெனக் கருதியதோ
இல்லை அடிபட்ட வலியோ
சீறவுமில்லைபூனை
கத்தவுமில்லை,
கொல்லையிலுள்ள ஒரு மரத்தின்
உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டது
மூன்று நாட்கள் யாரும் அறியவில்லை


பட்டினியாலும்
பூனையின் வைராக்கியத்தாலும்
மரத்திலிருந்து கீழே விழுந்தது
மரணத்தைத் தழுவியது,
வீட்டிலுள்ளோர் அழுதனர்
இழந்தவர் அழுகை
இறந்தவரை மீட்குமா?

சனி, 13 அக்டோபர், 2018

நிம்மதி கொள்ளும்




மனித ஆற்றலின் ஊற்று
மன அமைதி,
நிதானமும், அமைதியும்
நிம்மதியை கொடுக்கும்,
நிதான பயணம்
நீண்ட ஆயுளைத் தரும்

சாகும் வரை
சஞ்சலமில்லா வாழ்க்கை
அமைவது
இறைவன் அருளியது,
நிம்மதி எப்போதும்
 இறைக்கு ஒப்பாகும்

உறவும், பிள்ளைகளும்
ஒற்றுமையாய் இருந்து
நாலு பேர் மதிக்க
நல்வாழ்வு வாழ்ந்தபின்
முன்னே வந்தது முன்னே சென்றால்
மனதுக்கு நிம்மதி

அறுபது வயதைத் தாண்டி
அடியெடுத்து வைக்கும்போது
வேண்டாத நோயும்
வேதனை தரும் தனிமையும்
நெருங்காதிருந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி

பிள்ளைகளின் திருமணமும்
பட்ட கடனும்
நிறைவாய்
நடந்து முடிந்திருந்தால்
உறவுகளும் மதிக்கும்
உள்ளமும் அமைதியுறும்

புவியில் யாருக்கும்
பாரமாகிப் போகாமல்
பந்த பாசம் நிலைக்க,
பணி நிறைவுற்றதும்
பென்ஷனும் கிடைத்துவிட்டால்
முதுமையில் நிம்மதி

மனித வாழ்வில்
முடியும், பல்லும்
மண்ணை தொடாதிருக்க,
மெய் தொடுமா?
மரணமிப்ப இல்லையென
மனதுக்கு நிம்மதி

கடைசி மூச்சு வரை
காலைப் பொழுதுகளில்
கால் நடை பயிற்சி செய்தால்
காலனும் நெருங்கமாட்டான்
காலடியில் தான் மண்ணிருக்கும்
மனம் நிம்மதி கொள்ளும்


ஞாயிறு, 7 அக்டோபர், 2018

தங்கவில்லையே!




காவிரி ஆற்றின் சுவடு
காணாமல் போனாலும்
இளந்தென்றல் காற்றும்
கிணற்று நீரும் இன்றும்
கிராமத்து சனங்களைக்
கைகொடுத்துக் காக்கும்

காவிரி போலில்லாமல்
கருணையுள்ள நெஞ்சம்,
அள்ள அள்ளக் குறையா
அட்சய பாத்திரம் போல_ ஒரு
ஏழை ஆசிரியரின் உதவும் பண்பு
ஏது சொன்னாலும் குறையாது

எல்லாக் குழந்தைகளும்
மேன்மையுற,
ஏற்றம் தரும் கல்விதனை
கற்றுக் கொடுக்க
கல்விக்கூடம் கட்டிதர
கையேந்தினார் பண்ணையாரிடம்

ஏழைகளும் சேர்ந்து படிப்பர்
என்று கூறிஆசிரியரின்
எண்ணத்தை விட்டுவிடச்
சொன்னார் பண்ணையார்,
அசராத ஆசிரியர் அரசை நாடி
அறிவுக்கு வித்திட்டார்

ஓடும் நாளில் ஒரு நாள்
மாடுமேய்க்க பண்ணைக்கு
சிறார்கள் போகாததால்
சினம் கொண்டார் பண்ணையார்,
பசையுள்ள பக்கம் மக்கள்
பரிதாப நிலையில் ஆசிரியர்

காலமுழுதும் நாம் காத்திருந்தும்
கண்டுகொள்ளாத காவிரி
கடலோடு கலந்து வீனானதுபோல்
ஊராரின் தொல்லையால் ஆசிரியரை
ஊரைவிட்டு விரட்டியது
வெட்கக்கேடுஇப்போதெல்லாம்
தங்க விக்ரகங்களே  தங்கவில்லையே !