ஓடும் நதிகளை
மேடுகள் தடுத்தால்
நதிகள் ஓய்வதில்லை,
நகர்ந்து வேறுவழி தேடும்
பயணம் தொடரும்
தடைகள் என்பது
தவிர்க்க முடியாத ஒன்று,
தடைகளைக் கண்டு
தயங்கி நின்றவர்கள்
வெற்றி கண்டதில்லை
இரையோடு தரையில்
ஊர்ந்து சென்ற எறும்புக்கும்
தரை வெடிப்பு ஒரு தடையானது
இரையை வெடிப்பில் வைத்து
அதனை பாலமாக்கியது
பாலத்தில் ஏறி எறும்பு
பயணத்தைத் தொடர்ந்தது
ஊரும் எறும்புக்கும்
வெற்றி கிடைத்தது
எறும்புக்கும் அறிவுண்டு
துன்பம் போக்கவும்
தரத்தை உயர்த்த சிந்திக்கவும்
தடைகள் பாடமாகும்,
தடையைத் தாண்டி
வந்தது தான் மனிதப் பிறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக