ஏதேதோ காரணத்தால்
என்னென்னவோ
நடந்தாலும்
பாழும் இப்பூவுலகில்
பலியானோர் பலகோடி
இயற்கையின்
சீற்றமும்
மனிதர்களின்
பேராசையும்
மக்களைக்
கொன்றிருக்கக்
காலத்தை குறை
கூறலாமோ?
நாடாண்ட தலைவர்களின்
நன்றி கெட்ட செயலால
ஓடாகி உருக்குலைந்த
மக்கள்
உலகப் போர்களை துவக்க
அதனோட விளைவால
அணுவாயுத பரவலாக்கத்
தடை சட்டம் உருவானது
காலம் கற்று தந்தது
தானே!
உலகையே புரட்டி போட்ட
சுனாமிபோல—காஷ்மீரில்
ஆறெல்லாம் ஒன்றுகூடி
ஊருக்குள் ஏரியாகி
வீடெல்லாம்
மிதந்திருக்க
மக்களெல்லாம்
பரிதவிக்க
மீனைப்போல்
சுறுசுறுப்பாய்
முதன் மந்திரி,
இராணுவம் உதவினாலும்
நாட்டு மக்கள்
ஒன்றுபட்டு
உதவிக்கரம்
நீட்டலையா?
ஒருமைப்பாட்டை
தூக்கி நிறுத்தலையா?
காலம் ஒரு ஆசான்
கெடுப்பதில்லை
யாரையும்
நாளை நலமோடு நாம் வாழ
காலம் தான் கற்றுதர
முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக