சனி, 20 பிப்ரவரி, 2016

கடவுளுக்கும் தெரியலையோ?

பொழைக்க வழிதேடி
புறப்பட்டு வந்தவனே
வணங்கும் தெய்வங்கள்
வழி துணையாய் வாராதோ?

துன்பங்கள் ஆயிரம்
தமிழகம் கண்டாலும்
வந்தாரை வாழவைக்க--இந்த                                    
மண்ணுதான் மறந்ததுண்டோ?

நீரேதும் இல்லாமல்
நிலமெல்லாம் காய்ந்தாலும்
உன்னோட பொழப்புக்கு
உதவிக்கரம் நீட்டாதோ?

இரை தேடி வந்த
பறவையினம் போல
கூடி வாழ்ந்து மகிழ்ந்தாலும்
விதி விட்டு விலகிடுமோ?

எலும்புக் கூடாட்டம்
எழுந்து நின்ற கட்டிடம்
வானம் அழுததாலே
வலுவிழந்து வீழ்ந்ததோ?

உருதந்து எழவைத்த
உயிரெல்லாம் தவித்திருந்தும்
சேர்த்தழித்த மாயவனை
மனதார தொழுவேனோ?

பத்திரமா உயிர் வாழ
படைத்தவனை வேண்டலையோ?
காத்தருள வேண்டுமென

கடவுளுக்கும் தெரியலையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக