சனி, 1 பிப்ரவரி, 2014

சரித்திர நாயகன்


ெல்சன் மண்டேலா.

நினக்கும் நெஞ்சங்களை

நனையவிட்டு

நெகிழவைத்த மாமனிதன்

உறவு பிறப்பால் மட்டுமல்ல

அணைப்பும் பிணைப்புமென

உணர்த்திய குணக்குன்று

 

ன்னும் வேணுமென்று

ிரிவடையும் உள்ளம்

ாகும்வரை போதுமென்று

சொல்லாத அரசியலார் நடுவில்

குடிசையில் வாழ்ந்து

கோட்டைக்கு வந்தும்- போதுமென்று

குடிசையை நாடிய கோமகன்

 

தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்து

வடக்கிலிருந்து வந்தாண்டவரை

பணியவைத்து

வெள்ளையரை செதுக்கி

கருப்பின மக்களுக்கு

சுதந்திர சிலையாய் மாற்றி

வடிவமைத்த சிற்பி

 

இருபத்தேழு ஆண்டுகள்-சிறையில்

இளமையைத் தொலைத்தும்

மன்னிப்பு கோராத

வைராக்கிய பெருந்தலைவன்

வீழ்ச்சியில் கலக்கமோ

எழுச்சியில் மயக்கமோ

இல்லாத தெய்வமகன்

 

தர்மம்,சத்தியம்,நேர்மை

அத்தனையும் சேர்ந்த

மொத்த உருவெடுத்து

நதியாய் மாறினாய்-கருப்பின

மக்களின் நாகரீகம் வளர்ந்தது

உலகம் உள்ளமட்டும்-மக்கள்

உள்ளம் உன்னை மறக்காது

 

பிறந்ததும், மறைந்ததும் குலுவில்

ஒரு வரலாற்று சின்னம்

குலு மண்ணை முத்தமிட்டது  

குலுங்கி அழுதது குலுமட்டுமல்ல

பூலோகமே புதைந்தது கண்ணீரில்

கருப்பினத்தை விழிக்கவைத்து

உறங்குகிறான் ஒரு சரித்திர நாயகன்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக