சனி, 1 பிப்ரவரி, 2014

வரதட்சணை.


வரதட்சணை

வரம் வேண்டி தட்சணையா

இல்லை திருமணத்தில்

வரவேண்டியா தட்சணையா?

 

ட்சணை உனக்கெதற்கு-உயர்

பொன்னையே கொடுக்கையில

வரதட்சணை உனக்கெதற்கு

அக்கா, தங்கை உனக்கில்லையா?

 

எதுவானபோதும்

சிதைமூட்டாமல் சீதை ஒருத்தி

சிதைக்கப்படுகிறாள் உயிரோடு

என்பதுதான் நிதர்சனம்

 

இறைவனுக்கும் மனிதனுக்கும்                             

இடையிலிருக்கும் குருக்களுக்குக்

கேட்காமல் கொடுக்கும்-சிறு

காணிக்கை தான் தட்சணை

 

இறந்தவனின் இறுதி பயணத்தில்

திலகமென வீற்றிருக்கும் காசும் கூட

இடுகாட்டு ஊழியருக்கு-கேட்காமல்

கொடுக்கும் தட்சணை தான்.

 

கேட்டு பெறுவதும்-அளவுக்கு

மீறி கொடுக்க வைப்பதும்

தட்சணையல்ல

இல்லாதவன் கையேந்தும் பிச்சை

 

கேட்டு பெறாமல்

மனமகிழ்ந்து கொடுக்கும் தட்சணை

வரதட்சணையென கூறினாலும்

அதுதான் என்றும் மரியாதை பெறும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக