செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

கருவின் முதற்கூறு


படைத்தவளைப் பார்த்திட

படைத்தவள் தந்த பரிசோ-இல்லை

தன்னைக் காத்து வாழ்ந்திட

இறைவன் தந்த புலனோ!

 

நல்லவனாய் வாழ்ந்திட

அறிவுறுத்தும் ஆசானோ-இல்லை

துனையைக் காட்டி மகிழ்ந்திட

வடித்தெடுத்த வட்ட நிலவோ!

 

அழகுக் காட்சிகளை மனதில்

அள்ளி சேர்க்கும் தென்றலோ-இல்லை

வார்த்தெடுத்த உடலுக்கு

மெருகூட்டும் கலைப்பொருளோ!

 

எண்ணத்தின் உணர்வுகளை

சிலையாய் மாற்றும் சிற்பியோ-இல்லை

உழைத்து உயிர் வாழ

உதவும் கருவின் முதற்கூறோ!

 

இத்தனை சிறப்பிருந்தும்

மங்கையரின் கயல் விழியோ

தூண்டிலிட்டு துடிக்க வைக்கும்

ஆணின் இதயத்தை.!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக