சனி, 12 டிசம்பர், 2020

வாழ்க்கை

 

ஊழி அழிந்தாலும்

ஊழல் அழியா தேசத்தில்

வலிமையான வறுமை மட்டும்

வந்தமரும் எப்போதும்ஏழைகளின்

வயிற்றிலடித்து உயிரை பறிக்க

வெட்டுப் பழி போல

வாட்டிக் கொல்லும்

 

படுக்க இடமில்லை

பசி போக்க வழியில்லை

பரிதவித்து நிற்கையிலே

பரிவட்டம் கட்டியவர்களும்

படைத்த பரமனும் கூட

கண்டு கொள்ளாதது

கானகம் புகுந்தார்களோ !

 

குடும்பங்கள் தெருவில் நிற்க

குடி புகுந்த ஆறுகள் எல்லாம்

கிடைத்ததை எடுத்து செல்ல

இருந்ததும் போனது,

என்ன எடுத்து வந்தோம், எடுத்து செல்ல ?

கானல் நீரைத்தேடி ஓடிய

கவரி மான் போலத்தான் வாழ்க்கை.