சனி, 28 டிசம்பர், 2019

கறுப்பானானோ!




ஊரு நாட்டாமை போல
பேரு பெற்றவரு,
மக்களை பயத்தாலேயே
மண்டி போட வைப்பவரு,
பழி, பாவங்களுக்கு அஞ்சாதவரு,
பழியை அடுத்தவர் மீது சுமத்தி
தப்பிக்கும் கலையில்
தலை சிறந்த பெரியவரு

அடுத்தவர்களின் உயர் சொத்தை
அபகரிக்க எண்ணி—அதிலும்
தன் தலை உருளாமல்
தப்பிக்க நினைத்த தர்மராஜா
உருவாக்கிய பினாமி தான்
சுனாமியெனும்பேரலை
பறித்த உயிர்கள் பல ஆயிரங்கள்
பெருமகனார் அறியாததா 1

இருள் கூடும்
அமாவாசை தினத்தன்று
இறந்த முன்னோர்களை
நினைத்து வழிபடும்
சந்ததிகளின் துயரை
சந்திரன் காணபொறுக்காமல்—தன்
கரங்களால் முகத்தை மறைத்து
கறுத்து போனதுபோல்

சுனாமியின் கோரத்தால்
உயிரிழந்த மக்களின்
பதினைந்தாம் ஆண்டின்
நினைவு நாளான 26-12-2019 ல்
பிரார்த்தித்தவர்களின் துயர் கண்டு
கலங்கிய சூரியனும்—தனது
கைகளால் முகத்தை மறைத்து
கறுப்பானானோ !




செவ்வாய், 24 டிசம்பர், 2019

நாதியற்று போனார்கள்


எதுவும்  படிக்காத  பறவைகள்
எதிர் காலத்தை சரியாகக்
கணிக்கின்றன,
கடவுள் அளித்த நுண்ணறிவை
பட்டறிவாய் பயன்படுத்துவதால்
பறவைகளின் செயல்கள்
பிரமிக்க வைக்கின்றன

அனைத்தும் கற்ற மனிதனோ
அறிவை அடுத்தவருக்கு
விற்றுக்கொண்டிருப்பதும்,
ஊழல்களால் பணம் ஈட்டுவதும்
வாடிக்கையானதால்
நற்பண்பையும், நேர்மையையும் இழந்து
நாட்டு மக்கள் நாதியற்று போனார்கள்




எப்படிக் காண்பது




ஊராட்சி மன்ற தேர்தலில்
விலை போகும் பதவிகள்
பல லட்சங்கள் கொடுத்து
பதவியை பெற நினைப்பது
கொள்கைக்காகவாஇல்லை
கோடிகளுக்காகவா ?

மனித சேவைக்காக
முன்பு உருவான சட்டத்தை
மதிக்காமல்
மனித நேயத்தையும் மறந்து
மாற்று வழிபணத்திற்கு
மனதை அலைய விடலாமா?

தேர்தலில் வெற்றி பெற
தேர்ந்தெடுத்த நடைமுறை
தொகுதி மக்களுக்குக்
கொடுக்கும் பணம்
வாக்கு சீட்டாக மாறி
வாகை சூடிய பின்

மக்கள் நலனை பாராமல்
மக்கள் பணிகளில்
மறைமுகமாக பெறுவதை
முறையிட்டால்
தலையே சொல்கிறது
தேர்தலில் செலவிட்டதை
ஏப்படிக் காண்பது?

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அதைக் கெடுக்கலாமா?




சூரியனும், அதனை
சுற்றி வரும் கிரகங்களும்
புவி வாழ் மக்களுக்கு
பாகுபாடு ஏதுமின்றி
பலன் தந்து காப்பது
பண்பாடா ? கருணையா ?—இல்லை
உலக மக்களெல்லாம்
ஒரு குலமென உணர்த்தவா ?

வயிற்று பசி போக்கி
வாழ்வளித்தவனை
உளமாற நினைத்து
வணங்கி வழிபட- மாந்தர்
அவரவர்  அறிந்த பெயரில்
அழைத்து மகிழ்ந்தார்கள்—இறைவன்
மக்கள் மனதில் அமர்ந்தான்
மதங்கள் தோன்றின

இறைவன் ஒருவனே
ஒரு பெண்ணான
அன்னையைப்போல--அவள்
அவளது தந்தைக்கு மகள்
கூடப்பிறந்தோர்க்கு சகோதரி
கணவனுக்கு மனைவி
பெற்ற பிள்ளகளுக்கு தாயென
பல அவதாரங்கள் அவளுக்குண்டு

அதுபோல் தான் இறைவனும்
ஆசையோடுஅழைத்தவர்களுக்காக
அவதாரங்கள் பல எடுத்தார்
தாங்கள் உண்பதைத்
தெய்வத்திற்கும் படைத்து
அன்பை வெளிகாட்டினர்- மக்கள்
ஒன்றே குலம், ஒருவனே
தேவனென ஏற்றுக்கொண்டார்கள்

வெவ்வேறு மதங்கள்
வேர்விட்ட போதும்--எதுவும்
 உயர்ந்ததுமல்ல,தாழ்ந்ததுமல்ல,
மண்ணில் இன்னமும்
மனிதக் குழந்தைகள் பிறப்பது
இறைவன் மனிதர்கள் மீது
வைத்திருக்கும் நம்பிக்கை தானே!
அதைக் கெடுக்கலாமா ?