செவ்வாய், 24 டிசம்பர், 2019

நாதியற்று போனார்கள்


எதுவும்  படிக்காத  பறவைகள்
எதிர் காலத்தை சரியாகக்
கணிக்கின்றன,
கடவுள் அளித்த நுண்ணறிவை
பட்டறிவாய் பயன்படுத்துவதால்
பறவைகளின் செயல்கள்
பிரமிக்க வைக்கின்றன

அனைத்தும் கற்ற மனிதனோ
அறிவை அடுத்தவருக்கு
விற்றுக்கொண்டிருப்பதும்,
ஊழல்களால் பணம் ஈட்டுவதும்
வாடிக்கையானதால்
நற்பண்பையும், நேர்மையையும் இழந்து
நாட்டு மக்கள் நாதியற்று போனார்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக