சனி, 28 டிசம்பர், 2019

கறுப்பானானோ!




ஊரு நாட்டாமை போல
பேரு பெற்றவரு,
மக்களை பயத்தாலேயே
மண்டி போட வைப்பவரு,
பழி, பாவங்களுக்கு அஞ்சாதவரு,
பழியை அடுத்தவர் மீது சுமத்தி
தப்பிக்கும் கலையில்
தலை சிறந்த பெரியவரு

அடுத்தவர்களின் உயர் சொத்தை
அபகரிக்க எண்ணி—அதிலும்
தன் தலை உருளாமல்
தப்பிக்க நினைத்த தர்மராஜா
உருவாக்கிய பினாமி தான்
சுனாமியெனும்பேரலை
பறித்த உயிர்கள் பல ஆயிரங்கள்
பெருமகனார் அறியாததா 1

இருள் கூடும்
அமாவாசை தினத்தன்று
இறந்த முன்னோர்களை
நினைத்து வழிபடும்
சந்ததிகளின் துயரை
சந்திரன் காணபொறுக்காமல்—தன்
கரங்களால் முகத்தை மறைத்து
கறுத்து போனதுபோல்

சுனாமியின் கோரத்தால்
உயிரிழந்த மக்களின்
பதினைந்தாம் ஆண்டின்
நினைவு நாளான 26-12-2019 ல்
பிரார்த்தித்தவர்களின் துயர் கண்டு
கலங்கிய சூரியனும்—தனது
கைகளால் முகத்தை மறைத்து
கறுப்பானானோ !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக