செவ்வாய், 24 டிசம்பர், 2019

எப்படிக் காண்பது




ஊராட்சி மன்ற தேர்தலில்
விலை போகும் பதவிகள்
பல லட்சங்கள் கொடுத்து
பதவியை பெற நினைப்பது
கொள்கைக்காகவாஇல்லை
கோடிகளுக்காகவா ?

மனித சேவைக்காக
முன்பு உருவான சட்டத்தை
மதிக்காமல்
மனித நேயத்தையும் மறந்து
மாற்று வழிபணத்திற்கு
மனதை அலைய விடலாமா?

தேர்தலில் வெற்றி பெற
தேர்ந்தெடுத்த நடைமுறை
தொகுதி மக்களுக்குக்
கொடுக்கும் பணம்
வாக்கு சீட்டாக மாறி
வாகை சூடிய பின்

மக்கள் நலனை பாராமல்
மக்கள் பணிகளில்
மறைமுகமாக பெறுவதை
முறையிட்டால்
தலையே சொல்கிறது
தேர்தலில் செலவிட்டதை
ஏப்படிக் காண்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக