ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அதைக் கெடுக்கலாமா?




சூரியனும், அதனை
சுற்றி வரும் கிரகங்களும்
புவி வாழ் மக்களுக்கு
பாகுபாடு ஏதுமின்றி
பலன் தந்து காப்பது
பண்பாடா ? கருணையா ?—இல்லை
உலக மக்களெல்லாம்
ஒரு குலமென உணர்த்தவா ?

வயிற்று பசி போக்கி
வாழ்வளித்தவனை
உளமாற நினைத்து
வணங்கி வழிபட- மாந்தர்
அவரவர்  அறிந்த பெயரில்
அழைத்து மகிழ்ந்தார்கள்—இறைவன்
மக்கள் மனதில் அமர்ந்தான்
மதங்கள் தோன்றின

இறைவன் ஒருவனே
ஒரு பெண்ணான
அன்னையைப்போல--அவள்
அவளது தந்தைக்கு மகள்
கூடப்பிறந்தோர்க்கு சகோதரி
கணவனுக்கு மனைவி
பெற்ற பிள்ளகளுக்கு தாயென
பல அவதாரங்கள் அவளுக்குண்டு

அதுபோல் தான் இறைவனும்
ஆசையோடுஅழைத்தவர்களுக்காக
அவதாரங்கள் பல எடுத்தார்
தாங்கள் உண்பதைத்
தெய்வத்திற்கும் படைத்து
அன்பை வெளிகாட்டினர்- மக்கள்
ஒன்றே குலம், ஒருவனே
தேவனென ஏற்றுக்கொண்டார்கள்

வெவ்வேறு மதங்கள்
வேர்விட்ட போதும்--எதுவும்
 உயர்ந்ததுமல்ல,தாழ்ந்ததுமல்ல,
மண்ணில் இன்னமும்
மனிதக் குழந்தைகள் பிறப்பது
இறைவன் மனிதர்கள் மீது
வைத்திருக்கும் நம்பிக்கை தானே!
அதைக் கெடுக்கலாமா ?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக