சனி, 23 நவம்பர், 2019

இருந்துவிடக்கூடாது




மக்களின் முன்னேற்றத்தை
முடமாக்குவது
மதமும், அரசியலும் தான்,
மத நம்பிக்கை, அரசியல் இரண்டும்
மக்களை ஆட்கொள்வதால்
மக்களிடையே மனக்கசப்பு
இருவேறு பாதை
இரண்டும் பகையோடு என்றும்

பொது இடங்களை ஆக்கிரமிக்க
கொடி நட்டு வைப்பதும்,
கட்டிடம் ஒன்றை கட்டி
மக்களை வழிபட வைத்துபின்
அபகரிப்பதும் எளிதல்லவா !
மக்களுக்கு வழிகாட்டலாமா
இல்லாத ஏழைகளும்
இப்படி செய்தால் ஏற்புடையதா?

மனிதனுக்கு வேண்டாததல்ல
மதமும், அரசியலும்
ஆக்கிரமிப்புகளுக்கும்,
பண்பாட்டு நெறிக்கும்
எதிராக இருந்து , நாட்டு நலனுக்கும்,
தேச முன்னேற்றத்திற்கும்
தடைகளாய் நீங்கள்
இருந்துவிடக்கூடாது


தெருவில் நிற்கும்




ஊர் மக்களெல்லாம்
ஒன்று கூடி இழுக்கும்
தேர்த்திருவிழா,
ஆண்டவனுக்கு முன்னால்
அனைவரும் சமமென
ஆர்ப்பரிக்கும் நந்நாள்

பகைமை மறந்து
ஈகை குணத்தோடு
இறைவனை அழைத்து செல்ல
ஒற்றுமையாய்
வடம் பிடிக்கும் கைகள்
வரலாறு படைக்கும்போது

சாதிக் கலவரமும்
சாதிக்க வந்ததுபோல்
சங்கு ஊத,
தீவிரவாதம் வழிகாட்டும்
சனங்கள் செத்து மடியும்
சாமி தெருவில் நிற்கும்


சனி, 16 நவம்பர், 2019

நாம் எட்டமுடியும்




உயர் பண்பு , நந்நடத்தை
ஒருவரை உயரச்செய்யும்
மரியாதை தந்து மகுடம் சூட்டும்
மக்கள் மனத்தில் அமரச் செய்யும்,
அவமானம் அப்படியல்ல

ஒருமுறை அவமானப்பட்டால்
ஆயுள் உள்ளவரை
அகலாது மனதை விட்டு,
மற்றவர்களிடமிருந்து
மரியாதையும் கிடைக்காது

அகங்காரம் தலைக்கேறினால்
அவமானம் அடிமனத்தில் அமரும்,
பிறர் அவமானப் படுத்தினால்
பொறுமையாக இரு
பெறுபவர் ஏற்காதபோது
அவரிடமே போய் சேரும்

உயர் பதவி
வகிப்பவர்களிடமிருந்து
நாடு எதிர்பார்ப்பது
நல்ல பண்பாட்டையும்,
உயர் கண்ணியத்தையும் தான்

தடம் புரளும்போது
தன் மானம் குறையும்
தேசத்திற்கும், மனித குலத்திற்கும்
இழிவைத் தந்து
அவமானப்பட வைக்கும்

அவமானங்களையும்
அவமரியாதைகளையும் கண்டு
அஞ்சாமல் ,தாங்கிக்கொண்டால்
நமது இலக்குகளை
நாம் எட்டமுடியும்

போராட வைக்கிறானோ !




காட்டு விலங்குகள் போல்
காலம், காலமாய்
வாழும் மாந்தர்கள்
உண்ணும் உணவுக்கும்
உயிர் வாழ்வதற்கும்
போராடி வாழும் நிலை
பாமர மக்களுக்கு

நகரங்கள் உருவாகி
நாகரீகம் வளர்ந்தபோதும்
போராட்டங்கள் குறையாமல்
புதுப்புது நிகழ்வுகள் ,
அதிகாரத்தில் இருப்போர்க்கு
அள்ளித்தரும் இறைவன்
ஏழைக்கு உதவலையே !

பதவியில் இருப்பவர்கள்
பணத்திற்காக எப்போதும்
சுற்றி,சுற்றி வருவார்கள்
சுறுசுறுப்பா இருப்பார்கள்
ஆதலால் உடலும்,மனமும்
உயர்வோடிருக்கும்
ஒரு குறையும் இராதென எண்ணி

சோர்ந்து இருப்பவனை
சுருண்டு,மாண்டுபோகாமல்
தவிர்ப்பதுபோல் கடவுள்
தூண்டிவிட்டு ,ஏழைகளுக்கு
பாதிப்பு ஏற்படாமல்
பிரச்சனைகளை உருவாக்கி
போராட வைக்கிறானோ !

நல்லாயிருக்குமா?




எல்லாமும் அழகு தான்
அதிகம் ஆகாதவரை ,
பெய்யும் மழை கூட அழகு
வெள்ளம் வராத வரை ,
தென்றலும் அழகு
வேகம் கூடாதவரை

வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழ்பவர்கள் அதிகமாம்
இந்தியாவில் ,
படிப்பறிவில் அதிகம்
பின்  தங்கியிருப்பதும்
இங்கு தானாம்

ஊட்டச் சத்து குறைவால
உயிரிழக்கும் குழந்தைகள்
அதிகம் இந்தியாவில் ,
அழிவு தரும் செயல்கள்
இப்படியே அதிகரித்தால்
இந்தியா அழகென்று சொல்ல
இதயம் ஏற்குமா ?

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும் ,
அளவுக்கு மீறிய
வறுமையும் / செல்வமும்மனித
ஒழுக்கத்தைக் கெடுக்காதா ?
நாடு நல்லாயிருக்குமா ?



செவ்வாய், 12 நவம்பர், 2019

வாழ்ந்திடுவோம்




வாழ்க்கை எல்லோருக்கும்
ஒன்றுபோல அமையாது,
வாழும் மாந்தருக்குக்
கருவறை தொடங்கி
கல்லறை வரை என்பது
கடவுள் படைத்தது

தனக்கென வாழ்வது
தவறானது
பாவம் என்கிறது
பகவத்கீதை,
மற்றவரையும் தன்னைப்போல்
மதிப்பவன் தான் மனிதன்

வாழும் மக்களுக்கு
வழிகாட்டுவது
வெற்றி பெறும் அரசின்
பெரும் பொறுப்பு
வருமுன் காத்து
வறுமையை ஒழிக்க வேண்டும்

அறிவால் காத்து
அன்பால் ஒன்றுபட்டு
வாழ்க்கையை
வளமாக்குவோம்,
வாழும்போது நல்லபடியா
வாழ்ந்திடுவோம்


செவ்வாய், 5 நவம்பர், 2019

நிறையா? குறையா?





பண்டைய மனிதர்கள்
பழி, பாவத்திற்குப் பயந்தார்கள்,
தாய்ப்பால் குடித்த வரை
தரம் தாழ்ந்து போனதில்லை,
வாழ்ந்து மகிழ்ந்தார்கள்—பிறரை
வாழ வைத்தார்கள்

பக்கத்து வீட்டாரும்
பாசத்தோடு பழகினார்கள்,
நெஞ்சம் நிறைந்ததால்
நம்பிக்கை நிலைத்தது,
காவிரி அன்னை கூட—அன்று
காத்து நின்றாள் மக்களை

அபூர்வங்கள் நிறைந்த
அற்புத மனிதர்கள்,
காவிரி நீர் பருகிய
காலத்தின் விழுதுகள்,
காலனே வந்தாலும்
காத்திருக்க சம்மதிப்பான்

அன்று பணம் கொடுத்து
அதிகாரம் பெற்ற நிகழ்வுகள்
இங்கு வாழ்ந்த மக்களிடம்
இருந்ததாக
அகழ்வராய்ச்சியில் இல்லாதது
நிறையா? குறையா?