காட்டு விலங்குகள் போல்
காலம், காலமாய்
வாழும் மாந்தர்கள்
உண்ணும் உணவுக்கும்
உயிர் வாழ்வதற்கும்
போராடி வாழும் நிலை
பாமர மக்களுக்கு
நகரங்கள் உருவாகி
நாகரீகம் வளர்ந்தபோதும்
போராட்டங்கள் குறையாமல்
புதுப்புது நிகழ்வுகள் ,
அதிகாரத்தில் இருப்போர்க்கு
அள்ளித்தரும் இறைவன்
ஏழைக்கு உதவலையே !
பதவியில் இருப்பவர்கள்
பணத்திற்காக எப்போதும்
சுற்றி,சுற்றி வருவார்கள்
சுறுசுறுப்பா இருப்பார்கள்
ஆதலால் உடலும்,மனமும்
உயர்வோடிருக்கும்
ஒரு குறையும் இராதென எண்ணி
சோர்ந்து இருப்பவனை
சுருண்டு,மாண்டுபோகாமல்
தவிர்ப்பதுபோல் கடவுள்
தூண்டிவிட்டு ,ஏழைகளுக்கு
பாதிப்பு ஏற்படாமல்
பிரச்சனைகளை உருவாக்கி
போராட வைக்கிறானோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக