வில்லிலிருந்து
புறப்பட்ட
அம்புபோல்
வாய் விட்டுப்போன
ஒரு சொல்
அற்பமானதென்றாலும்
அர்த்தமற்ற கோபத்தால்
பக்கத்து ஊரில்
பத்தாண்டு
வாழ்ந்திருந்தும்
வந்து பார்க்காமல்
வீராப்புடன்
வாழ்ந்தபோதும்,
அறுந்துபோன
சரம்போல
எடுக்கவோ, கோர்க்கவோ
யாரும்
முயலாதபோதும்,
மனம் சிக்கித்
தவிக்கவில்லை,
உன்னோட மரணம்
கேட்ட அந்த நொடி
எல்லாம் இழந்ததுபோல்
என் மனம்
ஏங்கித் தவிக்குது
பழைய நட்பின்
நினைவுகளை
சுமந்தபடி.