செவ்வாய், 11 நவம்பர், 2014

வீண் வம்பு


எளிமையை ஒதுக்கி வைத்து

பகட்டு நாகரீகத்தில்

நடித்து வாழ்வது—இன்று

வாடிக்கையாகிப் போனது

 

பாவம் எளிமை.

 

உதவ எண்ணும்போது

ஆயிரம் ஆடம்பரம்

இதயத்தில் ஏறி அமர்ந்தால்

ஏங்காதோ மனம்

 

ஆடம்பரமே இன்று

அரசியலாகிப் போனதும்

சினிமாவின்

நாகரீக மோகத்தாலும்

 

மக்கள் கெடும்போது

எளிமையைப் பற்றி

வாய்கிழியப் பேசினாலும்

ஒன்றும் ஆகப்போவதில்லை

 

நாமொன்று சொல்ல—மக்கள்

சாலை மறியல் செய்ய

நமக்கு எதுக்குங்க

வீண் வம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக