வியாழன், 6 நவம்பர், 2014

ஊரை சுற்றி நிற்பதேனோ?


மாயக்கண்ணன், திருடி

வாய்க்குள் ஒளித்து வைத்த

வெண்ணெயைப்போல்

திரண்டிருக்கும் மேகக்கூட்டம்

காத்திருக்கும்—தீபாவளி

பட்டாசின் தீயை அணைப்பதற்கு.

 

கார்கால மழையால்

காய்ந்திருக்கும் தாவரங்கள்

தலை குளித்துத் தலை நிமிரும்

பசுமைக் காட்சியெல்லாம்

கண்களைக் குளிரவைத்துக்

கவிதையாய் சுரந்தபோது

 

தொடர்மழையால் பெருவெள்ளம்

தாறுமாறாய் ஓடும் ஆறு

தறிகெட்டு உடைப்பெடுத்து

விளையும் பயிரும், வாழும் ஊரும்

விணாக்கப் பெய்த மேகம்

பாழாக்கிப்போனது

 

ஆறாக ஓடிவந்து

ஆறாதத் துயர் தந்து

மக்களெல்லாம் அழுது புலம்ப

வெட்கமில்லாம

வெட்டித்தனமாய் நீ மட்டும்

ஊரைசுற்றி நிற்பதேனோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக