திங்கள், 24 நவம்பர், 2014

மழை


காத்திருக்கும் வேளையிலே

கண்கலங்க வைப்பவளே

வாடையிலே நீ வந்து

அடைமழையாய் பெய்யலாமோ!

 

நீர்நிலை நிரப்பையிலே

ஆறுகளில் ஓடாமே

வெள்ளமென கரைபுரண்டு

ஊரையே நிரப்பலாமோ!

 

மண்ணுக்கு புனிதம்

நிறைவான மழையால் தானே

உன்னை நம்பி வாழும்—ஊர்சனத்தை

இரக்கமின்றி துன்புறுத்தலாமோ!

 

பண்டிகை திருநாள்—மழையால்

துளிரும் பச்சை நிறத்தால் தானே

தண்ணீரென்ற பெயருனக்கு

தண்மையாய் இருப்பதாலன்றோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக