சனி, 23 நவம்பர், 2019

இருந்துவிடக்கூடாது




மக்களின் முன்னேற்றத்தை
முடமாக்குவது
மதமும், அரசியலும் தான்,
மத நம்பிக்கை, அரசியல் இரண்டும்
மக்களை ஆட்கொள்வதால்
மக்களிடையே மனக்கசப்பு
இருவேறு பாதை
இரண்டும் பகையோடு என்றும்

பொது இடங்களை ஆக்கிரமிக்க
கொடி நட்டு வைப்பதும்,
கட்டிடம் ஒன்றை கட்டி
மக்களை வழிபட வைத்துபின்
அபகரிப்பதும் எளிதல்லவா !
மக்களுக்கு வழிகாட்டலாமா
இல்லாத ஏழைகளும்
இப்படி செய்தால் ஏற்புடையதா?

மனிதனுக்கு வேண்டாததல்ல
மதமும், அரசியலும்
ஆக்கிரமிப்புகளுக்கும்,
பண்பாட்டு நெறிக்கும்
எதிராக இருந்து , நாட்டு நலனுக்கும்,
தேச முன்னேற்றத்திற்கும்
தடைகளாய் நீங்கள்
இருந்துவிடக்கூடாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக