உடையாத கருத்தும் உடைந்த வரிகளும்.
அந்தி சாயும் நேரம்
வானம் முந்தி விரிக்க
வாரித் தெளித்தாற்போல்
வண்ணக் காட்சிகள்,
காட்சிகளில் மயங்கும்
மனம், வானம்பாடியாய்
சிறகு விரித்து வானில்
வட்டமிட்டு
வந்தடையும் நெஞ்சுக்குள்,
கூண்டுக் கிளிபோல
பொறுக்கி யெடுக்கும்
வார்த்தைகள்
வார்த்தைகளின் கூடல்களில்
வந்து விழும் வரிகள்,
பிச்சை யெடுக்கும்
பச்சிளங் குழந்தைகள்
முடமாக்கப்படுவது போல்
சிறுசும் பெரிசுமாய்
உடையும் வரிகள்,
உடைந்த வரிகள்
உடையாத கருத்தோடு
உறவாட
புது வாழ்க்கைத் தொடங்கும்
புதுக் கவிதையாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக