அரங்கேற்றம்.
சலசலக்கும் அருவியின்
சங்கீத ஓசை,
சதிராடும் நீரின்
சாரல்கள்,
கதிரவனின் கரம்பட்டு
வண்ண ஒளி கூட்டும்
நாட்டிய மேடை,
தென்றலின் துணையோடு
ஆடும் செடி கொடிகள்,
கை தட்டி ரசிக்கும்
பட்டாம் பூச்சிகள்,
காட்டில் ஒரு
நாட்டியம்
அரஙேற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக