ஊர் எல்லையில்
நின்று
காவல் காக்கும்
சாமிக்கு
படையிலிட்டு
வீட்டு விலங்குகளை
வெட்டிக்
காவு கொடுத்து
வழிபடும்
மனிதனைக்
கரையேறி
எழுந்து வந்து
கடலலைகள்
காணிக்கையாய்
அள்ளி எடுத்து
பலி கொடுக்கும்
தன் ஆதி பகவனுக்கு.
உறவுகளை
தாரை வார்த்து
கண்ணீர் மல்க
புலம்பி அழும்போதும்
நினைவுக்கு
வருவதில்லை
தெய்வம் நின்று
கொல்லுமென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக