வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தெய்வம் நின்று கொல்லும்

ஊர் எல்லையில்
நின்று
காவல் காக்கும்
சாமிக்கு
படையிலிட்டு
வீட்டு விலங்குகளை
வெட்டிக்
காவு கொடுத்து
வழிபடும்
மனிதனைக்
கரையேறி
எழுந்து வ‌ந்து
க‌ட‌ல‌லைக‌ள்
காணிக்கையாய்
அள்ளி எடுத்து
ப‌லி கொடுக்கும்
த‌ன் ஆதி ப‌க‌வ‌னுக்கு.

உற‌வுக‌ளை
தாரை வார்த்து
க‌ண்ணீர் ம‌ல்க‌
புல‌ம்பி அழும்போதும்
நினைவுக்கு
வ‌ருவ‌தில்லை
தெய்வ‌ம் நின்று
கொல்லுமென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக