சனி, 24 செப்டம்பர், 2011

பெண்ணினம்.

வாழும் உலகை
இறைவன் படைத்தான்..அதில்
ஆண் பெண்ணென‌
இரு இனத்தை வைத்தான்
அன்பு என்ற வார்த்தைக்கு
பெண் என்று சொல்லி
வைத்தான்
கண் இமை போல்
காக்கும் அன்னையை
பெண்ணினத்தில் வைத்து
பெருமை சேர்த்தான்.

உருவாகும் கருவில்
ஆண்கருவை அதிகம் வைத்து
அதில் கொஞ்சம்
அழித்து வைத்தான்.
பெண்கருவை குறைத்து வைத்து
அனைத்தையும் அழியாமல்
பிறக்க விட்டான்.

பச்சிளம் பருவத்தில்
பிறவி ஊனத்தையும்
தொற்று நோயையும்
ஆணுக்குத் தந்த இறைவன்
பெண்ணைக் காத்து நின்றான்.
ஆணைவிட ஆண்டு எட்டு
அதிகம் வாழ பெண்ணுக்கு தான்
இறைவன் வரம் தந்தான்.

குழ‌ந்தை குட்டியென்று
நாளும் போராடும் பெண்க‌ளுக்கு
மார‌டைப்பு என்னும் பேரிழ‌ப்பும்
ஆணைவிட‌க் குறைவுதான்.
ஆயிர‌ம் காரணம்
அடுக்கிக்கொண்டே போனாலும்
ஆனணைவிட அனைத்திலுமே
அதிக வலிமை பெற்றது
என்றும் பெண்ணினம் தான்.

மாறி வரும் காலத்தால்
கண்டி கதிர்காம முருகப்பெருமானே
காசோலையை ஏற்கும்போது
மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு
இடம் தராததற்கு
இறைவனின் பாராமுகமா?..இல்லை
வலிமை குன்றிய ஆணினமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக