திங்கள், 2 ஜனவரி, 2012

நட்பு

இதய அரியாசனத்தில்
எப்போதும் வீற்றிருக்கும்
எழுதப்படாத உறவு.
உயிரைவிட உயர்ந்திருக்கும்
நண்பனின் நட்புக்காக
உயிரை விட காத்திருக்கும்
என்றும் நல்ல நட்பு

இராமாயண குகனும்
சுக்ரீவனும் இராமனுக்கு
நல்ல நட்பில் கிடைத்த‌
தோழர்களல்லவா!
தோள் கொடுத்து
உயிர் காத்த உத்தமர்களல்லவா!

செஞ்சோற்றுக் கடன்கழித்த‌
மஹாபாரதக் கர்ணனும்
நல்ல நட்புக்கு ஒரு
இலக்கணமல்லவா!
ந‌ல்ல‌ ந‌ண்ப‌னாக‌
நீ இருந்தால்
நாளும் தேடிவ‌ரும்
ந‌ல்ல‌ ந‌ட்பு

உன் நண்பன் யாரென்று
தெரிந்தால்
உலகம் உன்னை
எளிதில் கணிக்கும்
நண்பனின் மரணம்கூட‌
நெஞ்சு பொறுக்கும்
நல்ல நட்பின் மரணம்
இருவரையுமே கொன்றுவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக